இராமாயண சுருக்கம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது :

இராமாயணம் சுருக்கம்

வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.

  1. அசல நிர்குண ஆத்ம ராமா
  2. ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
  3. இந்திரன் முதல் தேவர் வேண்டிட ராமா
  4. இகத்தில் அசுரரை அழித்திட ராமா
  5. பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
  6. கூடவே பிறந்த தசரத ராமா
  7. வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
  8. யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
  9. விசுவாமித்திரன் வேண்டிட ராமா
  10. சென்று மந்திரம் கற்றனை ராமா
  11. சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
  12. லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
  13. முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
  14. மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
  15. பாலப் பருவம் கடந்திட்ட ராமா
  16. பக்தன் ஞானி ஜனகன் ராமா
  17. மகளா முலகத் தாயவள் ராமா
  18. உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
  19. கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
  20. அடியின் தூளிபட் டெழுந்தனள் ராமா
  21. மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
  22. முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா
  23. ஜானகி தேவியை மணந்தாய் ராமா
  24. பரசுராமன் பலம்பறி ராமா
  25. அயோத்தி யடைந்த சுந்தர ராமா
அயோத்யா காண்டம்
  1. பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
  2. கைகேயி ஏவலால் தசரதன் ராமா
  3. வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
  4. சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
  5. நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
  6. முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
  7. தசரதன் மாளப் பரதனும் ராமா
  8. சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
  9. சுந்தரப் பாதுகை தந்தனை ராமா
ஆரண்ய காண்டம்
  1. தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
  2. முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
  3. துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
  4. தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
  5. பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
  6. சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
  7. கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
  8. ராவணத் துறவி சீதையை ராமா
  9. மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
  10. கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
  11. அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா
கிஷ்கிந்தா காண்டம்
  1. அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
  2. அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
  3. தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
  4. வானர வீரன் அநுமான் ராமா
  5. தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
  6. கணையாழி அடையாளம் தந்தனை ராமா
  7. அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
  8. ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
  9. மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
  10. அடியவன் அநுமான் நின்றான் ராமா
சுந்தர காண்டம்
  1. அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
  2. லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
  3. நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
  4. அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
  5. தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
  6. ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
  7. லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
  8. கண்டேன் சீதையை என்றனன் ராமா
  9. தேவியின் முடிமணி தந்தனன் ராமா
யுத்த காண்டம்
  1. தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
  2. வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
  3. விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
  4. ஆழிக் கணையும் கட்டினை ராமா
  5. அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
  6. அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
  7. தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
  8. அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
  9. கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
  10. இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
  11. அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
  12. விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
  13. ராவணன் கவசம் பேதித்த ராமா
  14. ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
  15. அழியா முக்தி தந்தாய் ராமா
  16. விபீஷணன் முடிசூட்டினை ராமா
  17. கண்டே சீதையை அணைந்தாய் ராமா
  18. புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
  19. பரதன் உயிரைக் காத்தனை ராமா
  20. அயோத்தி புகுந்து குடிகளை ராமா
  21. ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
  22. பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
  23. பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
  24. மாயப் பழியது தீர்க்கும் ராமா
  25. கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
  26. கவிவரன் வால்மீகி பாடிய ராமா
  27. லவகுசர் தந்தை யாகிய ராமா
  28. அசுவ மேதம் நடத்திய ராமா
  29. கோமள ஜானகி நாயக ராமா
  30. மறைகள் போற்றிடும் மன்மத ராமா
  31. பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
  32. ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
  33. துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
  34. நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
  35. பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
  36. முனிவர் கதையும் முடிந்ததே ராமா
  37. பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
  38. கதிரவ குலத்துத் திலகமே ராமா
  39. பயமழி மங்கள புங்கவ ராமா
  40. நரஹரி ராகவ நாரண ராமா
  41. அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
  42. அநுமானிதயத் துறையும் ராமா
  43. ராம ராம ஜய ராஜா ராமா
  44. ராம ராம ஜய சீதாராமா.

ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே !!

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..

…….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: