ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : கஜகர்ணம்
“கஜகர்ணம் “அடித்து பார்த்துவிட்டேன். ஒன்றும் முடியவில்லை “
ஒரு செயலை செய்ய முயற்சித்து முடியாமல் போகும் போது ,கடைசியில் பலரும் சொல்லும் வார்த்தை இது.
அது என்ன கஜகர்ணம் ?.
அழகாக விளக்கம் தருகிறார் வாரியார். மனிதர்கள் முன்று வகை உண்டு
- கஜ கர்ணம்
- அஜ கர்ணம்
- கோ கர்ணம்
1. கஜகர்ணம்
யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !
அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்…
அவர்களை ‘ கஜகர்ணம் ‘ போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
2. அஜகர்ணம்
ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும்.
அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்…. திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
… அவர்களை ‘ அஜகர்ணம் ‘ போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
3. கோகர்ணம்
பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !
அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .
இவர்களை ‘கோகர்ணம் ‘ போடுபவர்கள் என்று அழைக்கிறோம் ( திருமுருக கிருபானந்த வாரியார். )
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ