தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் :

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது :

தினசரி வாழ்க்கையில் செய்ய கூடாதவை :

  1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக் கூடாது .
  2.  உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும்.
  3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது
  4.  திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது .
  5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.
  6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டுஉணவு அருந்தக்கூடாது
  7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது.
  8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது .
  9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது …

  1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
  2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம்செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
  3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
  4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
  5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
  6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .
  7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
  8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால்ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும் .
  9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது .
  10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும்இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது
  11. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது…..

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..

………ஸ்ரீ


நேற்றைய கேள்விக்கான பதில்களை
பார்ப்போம் .
1. வைதீஸ்வரன் கோவில்
2. ஸ்ரீவில்லிபுத்தூர்
3. காலடி.
4. இராமேஸ்வரம்
5. ஸ்ரீரங்கம்.
6. தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீக்ஷிதர்.
7. திருக்கோட்டியூர். 8. கிருஷ்ணன்
9. மாணிக்கவாசகர்.
10. திருவானைக்காவல். 11.ஹயக்ரீவர்
12. தத்தாத்ரேயர்
13. நாரதர்.
14. வள்ளலார்
15.மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்
16 தில்லை.
17. பட்டீஸ்வரம்
18. பக்த பிரகலாதன்
19. திருவையாறு.
20. கந்த புராணம்.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: