ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
திருகருப்பறியலூர் திருத்தலம்
சிவஸ்தலம் பெயர் | திருகருப்பறியலூர் ( தற்போது தலைஞாயிறு என்று வழங்குகிறது ) |
இறைவன் பெயர் | குற்றம் பொறுத்த நாதர், அபராத க்ஷமேஸ்வரர் |
இறைவி பெயர் | கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை |
பதிகம் | திருஞானசம்பந்தர் – 1 சுந்தரர் – 1 |
எப்படிப் போவது | மயிலாடுதுறை – மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் – திருப்பனந்தாள் சாலையில், “தலைஞாயிறு” என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில் தலைஞாயிறு தலைஞாயிறு அஞ்சல் வழி இளந்தோப்பு மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டிணனம் மாவட்டம் PIN – 609201இவ்வாலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ