மனிதர்களில் நீங்கள் எந்த வகை தெரியுமா?
மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? என ஒரு ஞானி கூறுவதை கவனியுங்கள்.
பேராசைக்காரன், சராசரி மனிதன், உத்தமன், ஞானி என்ற நான்கு பிரிவுகளுக்குள் எல்லா மனிதர்களையும் வகையாக அடுக்கி விடலாம் எனப் பட்டியல் தருகிறார். அவற்களை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி ..
பேராசைக்காரன் – எல்லாமே என்னுடையது என்னுடையது. உன்னுடையதும் என்னுடையது என்பான்.
சராசரி மனிதன் – என்னுடையது என்னுடையது. உன்னுடையது உன்னுடையது என்பான்.
உத்தமன் – உன்னுடையதும் உன்னுடையது. என்னுடையதும் உன்னுடையது என்பான்.
ஞானி – உன்னுடையதுமன்று என்னுடையதுமன்று. எல்லாமே இறைவனுடையது என்பானாம்.
இதில் நீங்கள் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும்.
என்னை அறிந்திலேன்
இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும்
அறிந்திலேன்…… (திருமூலர்)
…….. ஸ்ரீ
தெரிந்ததும் தெரியாததும் பதில்:
1. நீர்,நிலம்,நெருப்பு,காற்று, ஆகாயம், 2. தண்டாயுதபாணி 3. ஐப்பசி 4. 9 நரசிம்மர் 5. காஞ்சி, கும்பகோணம் 6. துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி 7. சிதம்பரம் 8. திருத்தணி, 9. சுவாமிமலை 10. பரணி தீபம், 11. மதுரா 12. இராமேஸ்வரம் 13. காளிங்க நடனம். 14. திருநாகேஸ்வரம் 15. ரத சப்தமி 16. நெய் 17. 19 வது நட்சத்திரம் 18. தாழம்பூ 19. 12 வருடம் 20. திருவண்ணாமலை.