தெரிந்ததும் தெரியாததும் #8

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது: தெரிந்ததும் தெரியாததும் பகுதி

இன்றைய கேள்விகளுக்கான பதில்களை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

  1. காவிரியில் துலா ஸ்நானம் எந்த தமிழ் மாதம் செய்ய வேண்டும்
  2. திருவெம்பாவை இயற்றியவர் யார்?
  3. கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் யார்?
  4. திருமாலை வழிபாடு செய்பர்கள்….. ……. என அழைக்கப்படுவர்
  5. நவகிரக ஆலயத்தில் சந்திரனுக்கு உள்ள ஸ்தலம் எங்குள்ளது?
  6. பெரிய திருவடி என யாரை அழைப்பர் ?
  7. ஆண்டுக்கு ஒரு பாடல் என சிவன் மீது பாடியவர் ?
  8. விநாயகர் மீது ஆதிசங்கரர் பாடிய பாடல் எது ?
  9. அர்ஜுனனின் வில்லின் பெயர் என்ன?
  10. ஸ்ரீசக்ரத்தில் எந்தனை முக்கோண அமைப்பு உள்ளது.
  11. மஹாபாரத போர் நடந்த இடம் எது?
  12. பீஷ்மர் அருளிய விஷ்ணு சஹஸ்ர நாமத்தை மீண்டும் யார் சொல்லி வியாசர் எழுதினார்.
  13. கிருஷ்ணனிடம் இருந்த சக்ரம் பெயர் ?.
  14. தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை பிரசாதமாக கொடுக்கப்படும் ஸ்தலம் எது ?
  15. ஷன் மத வழிபாட்டு முறையை ஏற்படுத்தியவர் யார்?
  16. சித்து , அசித்து என்றால் என்ன?
  17. இராமன் தனது அவதாரத்தை முடித்துக்கொண்ட இடம்?
  18. விநாயகர் தேரின் அச்சை முறித்த இடம்
  19. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள பெருமாளின் பெயர் என்ன?
  20. கர்ணன் கடைசியாக கொடுத்த தானம் என்ன ?

பதில்கள்:

  1. ஐப்பசி மாதம்
  2. மாணிக்கவாசகர்
  3. தேவராய சுவாமிகள்
  4. வைணவர்கள்
  5. திங்களூர்
  6. கருடாழ்வார்
  7. திருமூலர்
  8. கணேச பஞ்சரத்னம்
  9. காண்டீபம்
  10. நாற்பத்தி மூன்று (43)
  11. குருட்சேத்ரம்
  12. சகாதேவன்
  13. சுதர்சன சக்ரம்
  14. திருச்செந்தூர்
  15. ஆதிசங்கரர்
  16. சித்து என்றால் உயிர்களின் தொகுதி அசித்து என்றால் உயிரில்லாத பொருளை குறிக்கும்
  17. சரயு நதி
  18. அச்சிறுப்பாக்கம்
  19. கோவிந்தராஜ பெருமாள்
  20. தான் வைத்திருந்த புண்ணியம்

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: