தெரிந்ததும் தெரியாததும் #10

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: தெரிந்ததும் தெரியாததும் பகுதி

இன்றைய கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

  1. கற்களையே மலராக சிவலிங்கத்தின் மீது எரிந்து வழிபட்ட நாயன்மார்?
  2. எந்த ஊரில் பிறந்தால் முக்தி என்பார்கள்?
  3. சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேதாகமங்களின் ரகசியத்தை உபதேசம் செய்த ஸ்தலம்?
  4. தசாவதாரத்தில் ராம நாமம் கொண்ட அவதாரங்கள்?
  5. திதியையும் விதியையும் மாற்றிய திருத்தலம் எது?
  6. திரிவேணி சங்கமம் என்றால் என்ன?
  7. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பிறந்த ஊர்?
  8. விஸ்வ லிங்கம் ராமேஸ்வரத்தில் யாரால் ஸ்தாபிக்கப் பட்டது?
  9. சிவனின் 5 சபைகள் எது?
  10. கோவில் அண்ணன் என்று ஆண்டாளால் பெயர் சூட்டப் பட்டவர்?
  11. தேவர்களுக்கு உத்தராயணம் என்பது எந்த பொழுது (காலம்)
  12. கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் தமிழ் மாதம்?
  13. ஐயப்பனின் இயற் பெயர் என்ன?
  14. முருகன் சிவனை வழி பட்ட ஸ்தலம்?
  15. நலம் தரும் நாமம் எது?
  16. 108 வது திவ்ய தேசம் எது?
  17. பெரியாழ்வார் ஆண்டாளை குழந்தை யாக கண்டெடுத்த இடம்?
  18. சாரதிக்குரிய மீசையுடன் காட்சி கொடுக்கும் பெருமாள் ஸ்தலம்?
  19. காசியில் உள்ள மற்றொரு அம்பிகையின் பெயர் (விசாலாட்சி தவிர)
  20. அஷ்ட லக்ஷ்மியில் முதல் லக்ஷ்மி யார்?

……………………………………………

பதில்கள்:

  1. சாக்கிய நாயனார்
  2. திருவாரூர்
  3. உத்தர கோச மங்கை
  4. பரசுராமர், இராமர், பலராமர்
  5. திருக்கடையூர்
  6. கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் சேருமிடம்.
  7. திருமீயச்சூர்
  8. ஆஞ்சநேயர்
  9. கனக சபை, இரத்தினசபை, வெள்ளிசபை, தாமிரசபை, சித்திர சபை.

  10. இராமானுஜர்
  11. பகல் பொழுது.
  12. ஐப்பசி
  13. தர்மசாஸ்தா
  14. குமரக் கோட்டம்
  15. நாராயணா
  16. பரமபதம்
  17. துளசி செடி
  18. திருவல்லிக்கேணி
  19. அன்னபூரணி
  20. ஆதிலட்சுமி

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: