தெரிந்ததும் தெரியாததும் #11

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது தெரிந்ததும் தெரியாததும் பகுதி

இதன் பதில்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

  1. வியாசர் எழுதிய புராணங்கள் எத்தனை ?
  2. வேதங்களில் மிகவும் பழைமையானது எது?
  3. திருக்கோவிலூர் பெருமாளின் பெயர் என்ன?
  4. சிவனின் ஐந்து தொழில்கள் யாவை?
  5. திருஆவினங்குடி என்ற முருகனின் அற்படை வீடு எது?
  6. தேவேந்திரனின் வாகனமான யானையின் பெயர் என்ன?
  7. சீதையை மணமுடிக்க இராமர் ஒடித்த வில்லின் பெயர் ?
  8. அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் யார்?
  9. சைவ சமய குரவரர் யார் யார்?
  10. சிவபெருமான் யாருக்காக காலனை காலால் உதைத்தார்?
  11. சிவனுக்கு எத்தனை வடிவங்கள்?
  12. திருமுருகாற்று்படையை இயற்றியது யார்?
  13. சூரபத்மன் முருகனிடம் போரிடும் பொழுது எந்த மரமாக மாறி நின்றான்?
  14. காவேரி உற்பத்தியாகும் இடம்?
  15. உப்பினால் செய்த லிங்கம் எங்குள்ளது?
  16. குரு பூர்ணிமாவில் சன்யாசிகள் செய்யும் பூஜா ?
  17. பரமேஸ்வரனை அதிதேவதயாக கொண்ட நக்ஷத்திரம்?
  18. மஹா பிரதோஷம் வைணவர்கள் யாரை வணங்குவர்?
  19. தக்ஷிணாமூர்த்தி காட்டும் முத்திரையின் பெயர் என்ன?
  20. பூதத்தாழ்வார் பிறந்த ஊர்?
  21. சாம வேதம் எதை ஆதாரமாகக் கொண்டது?

பதில்கள்:

  1. 18
  2. ரிக் வேதம்
  3. திருவிக்கரமன்
  4. படைத்த்ல், காத்தல், அழித்தல், மறைத்தல், மற்றும் அருளல்.
  5. பழனி
  6. ஐராவதம்
  7. சிவதனுசு
  8. சுக்ராச்சார்யார்
  9. அப்பர்,.சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர்
  10. மார்க்கண்டேயர்
  11. 64
  12. நக்கீரன்
  13. மாமரம்
  14. கர்நாடக மாநிலம் தலை காவிரி
  15. இராமேஸ்வரம்
  16. வியாச பூஜா
  17. திருவாதிரை
  18. ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
  19. சின்முத்திரை
  20. திருக்கடல்மல்லை
  21. இசை

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: