வேல் மாறல் மஹா மந்திரம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய

வேல் மாறல்

இதனை தினமும் படித்து வந்தால் தீராத நோய்களும் தீரும், பில்லி சூன்யம் அகலும், நினைத்த கார்யம் நடக்கும் . இது இன்றளவும் உண்மை உண்மை!

இதனை மனமுருகி கேட்டு பாருங்கள். உங்களை அறியாமல் மனம் லயிக்கும். இது நிச்சியம்.

……. வேலும் மயிலும் துணை …

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … )

( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )

  1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் … (திரு)

  2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் … ( … திரு … )

  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

  6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

  7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

  10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

  11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

  12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

  13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

  14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

  15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

  16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

  17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

  18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

  19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

  20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

  21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

  22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

  23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

  24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

  25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

  26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

  27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

  28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

  29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

  30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

  31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

  32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

  33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

  34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

  35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

  36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

  37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

  38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

  39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

  40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

  41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

  42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

  43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

  44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

  45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

  46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

  47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

  48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

  49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

  50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

  51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

  52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

  53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

  54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

  55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

  56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

  57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

  58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

  59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

  60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

  61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

  62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

  63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

  64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

  65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

( … முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் … )

….. வேலும் மயிலும் துணை .. …

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: